சிங்களனுக்கு ஆயுதம் வழங்க - தமிழன் பணமா?
வருமான வரி அலுவலகங்களை இழுத்து மூடு!
ரசாயனக் குண்டுகளும் அழுகிய முட்டைகளும்
பார்ப்பான் கொலை செய்தால் - அவன் முடியை வெட்டினால் போதும்; சூத்திரன் கொலை செய்தால் - அவன் தலையை வெட்ட வேண்டும் என்று கூறுகிறது ‘மனு நீதி’. அந்த மனுநீதி இப்போதும் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சுப்ரமணிய சாமி சம்பவமே சான்று.
சில அழுகிய முட்டைகள் நீதிமன்றத்தில் அந்தப் பார்ப்பனர் மீது வீசப்பட்டதால் நாடே அலறுகிறது. பூகம்பம் நிகழ்ந்து விட்டதைப் போல் பார்ப்பன ஏடுகள் பதறுகின்றன. ‘இந்து’ பார்ப்பன ஏடு ஆசிரியருக்கு கடிதங்களையும், முன்னாள் நீதிபதி கருத்துகளையும், பார்ப்பன சங்க கருத்தையும் கேட்டுப் பெற்று, 2 பக்கங்களை ஒரு தனி மனிதனுக்காக அவன் பார்ப்பான் என்பதற்காக ஒதுக்கி செய்திகளை வெளியிடுகிறது.
மிரண்டு போன தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி பெறாமலே நீதிமன்றத்துக் குள் காவல்துறையை முறைகேடாக நுழைத்து, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மண்டையை உடைக்கிறது. வழக்கறிஞர்கள் கார்களை காவல்துறையே உடைத்து நொறுக்குகிறது. இவ்வளவுக்கும் காரணம் சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பான் மீது விழுந்த நான்கு அழுகிய முட்டைகள் தான்.
தில்லை நடராசன் கோயிலை தீட்சதப் பார்ப்பனர் களின் சொத்தாகவே நீடிக்க வேண்டும் என்பதற்காக தீட்சதப் பார்ப்பனர்களுக்காக தமிழக அரசை எதிர்த்து, வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வந்தவர்தான் சுப்ரமணியசாமி. ஒவ்வொரு நாளும் முல்லைத் தீவில் போர் நிறுத்தப் பகுதியில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சிங்கள ராணுவத்தின் ரசாயனக் குண்டுவீச்சால் பிணமாகி வரும் செய்திகள் வரும்போது இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் எதுவுமில்லை; அரசு பதற வில்லை; பார்ப்பன ஏடுகள் கொதிக்கவில்லை. கேவலம், நான்கு முட்டைகளின் சக்திக்கு முன் ராசயனக் குண்டுகள்கூட வலிமையிழந்து போய்விடுகின்றன.
காரணம், முட்டை விழுந்தது - ஒரு பார்ப்பான் மீது; அந்தப் பார்ப்பானுக்கு தமிழ்நாட்டில் அமைப்பு கிடையாது; ஆதரவு கிடையாது. ஆனால், அதிகாரம் - பார்ப்பன அதிகார மய்யம் சூழ்ந்து நிற்கிறது. இதுதான், இந்தியா! இதுதான் தமிழ்நாடு!
சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை!
போரை நிறுத்தி ஈழத்தமிழினம் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முன் வருமாறு விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்துக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் எழுப்பியுள்ள அர்த்தமுள்ள - நியாயமான கருத்துகளை சர்வதேச சமூகம் செவி மடுக்க வேண்டும். அக்கடிதம் முன்வைத்துள்ள முக்கிய கருத்துகளை இவ்வாறு பட்டியலிடலாம்:
1) வடக்கு-கிழக்கு மாநிலங்களை தங்களது பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் அவர்களுக்கான தாயகத்தை தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ் அமைத்துக் கொள்ள உள்ள உரிமையை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு ராணுவத்தால் அடக்கி, மைனாரிட்டி மக்களான தமிழர்களை இனப் படுகொலை செய்து வருகிறது. இது அரசு பயங்கரவாதம்.
2) அமைதி வழியில் உரிமைக்குப் போராடிய தமிழர் களுக்கு எதிராக சிங்களக் குடியேற்றங்களைத் திணித்து, தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு களைப் பறித்து, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியபோதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாக பிறப்பெடுத்தது.
3) வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் தாயகத்தை நிறுவும் அரசியல் ரீதியான முடிவுக்கு 1977 இல் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் கட்சி வழியாக ஏற்பு வழங்கினர். அந்த ஜனநாயக உரிமையை நிறைவேற்றும் தேசியக் கடமையை யாற்றவே விடுதலைப்புலிகள் முன் வந்தனர்.
4) அதனடிப்படையில் கடந்த 30 ஆண்டுகாலமாக விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் மகத்தான தியாகத்தால் தங்களது ராணுவ நடவடிக்கையால் உலகத்தின் பாராட்டுகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தனர்.
5) எப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக பலமாக விளங்கினார்களோ, அப்போ தெல்லாம் அரசியல் தீர்வுக்கு முன் வருவதாகக் கூறி, இலங்கை நாடகமாடி, தனது படை பலத்தை வலிமையாக்கி வந்துள்ளது. 1985 திம்புவில் தொடங்கி, 2002 இல் நார்வே நாட்டின் தலையீட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் உரு வாகும் வரை இந்த தந்திரத்தையே பின் பற்றினார்கள்.
6) நார்வே மற்றும் நிதி உதவி செய்யும் நாடுகளின் ஆதரவோடு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் கட்டமைப்பு, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உடனடி புனர் வாழ்வுத் திட்டங்களை நிறை வேற்றும் செயலகங்கள் அமைப்பு என்ற இந்த மூன்று ஒப்பந்தங்களையும் செயல்பட முடியாமல், சீர்குலையச் செய்ததே இலங்கை அரசுதான்.
7) போரை கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முன்வருமாறு சர்வதேச நாடுகள் விடுத்த கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தது - சிறீலங்கா தான். இது சர்வதேச நாடுகளுக்கே தெரியும். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் இலங்கை அரசு - ராணுவ தீர்வை மட்டுமே நம்பியிருப்பதை தொடர்ந்து மிகவும் சரியாக அம்பலப்படுத்தி வந்தது.
8) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறிலங்கா அரசியல் தீர்வு முயற்சிகளை கைவிட்டு, ராணுவத் தீர்வையே முன்னிறுத்தி யது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” என்று கூறிக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்த தொண்டு நிறுவனங்களையும், பத்திரிகையாளர் களையும் வெளியேற்றிய சிறீலங்கா அரசு, ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை துணி வோடு கண்டித்த தொண்டு நிறுவனத்தினரையும் பத்திரிகையாளர்களையும் ‘வெள்ளைப் புலிகள்’ என்று பழி போட்டது.
9) சிறீலங்கா அரசின் எல்லை மீறிய இந்த வன்முறைகளை பொறுமையுடன், சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் பதற்குக் காரணம், சிறீலங்காவுக்கு ‘அரசு’ என்ற அங்கீகாரம் இருப்பதால்தான். விடுதலைப் புலிகளின் நேர்மையான - நீதியான போராட்டத்தை சர்வதேசம் நிராகரிப்பதற்குக் காரணம் - ‘அரசு’ என்ற அங்கீகாரம் இல்லாமையே. ஹிட்லர் அரசு முதல் குவாண்டா அரசிலிருந்து சூடான் அரசு வரை, ஆட்சிகள்தான் இனப்படுகொலைகளை நடத்தின. 1956 இல் தொடங்கிய இந்த இனப் படுகொலை வரலாறு - இப்போது மேலும் விரிவடைந்து நிற்கிறது. 200,000-த்துக்கும் அதிகமான மக்கள் 1956 முதல் இனப்படு கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
10) தமிழர்களின் நியாயமான, தனித் தாயக உணர்வை ஆதரிக்கத் தயங்கும் சர்வதேச சமூகம், தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தமிழ் - சிங்கள மோதலுக்கு ஒரே நிலையான தீர்வு, தமிழர்களின் தாயகம் உருவாவதுதான். சிங்களப் படை மற்றும் சிங்கள அரசால் நீண்டகாலமாக படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள், விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். தங்கள் உடைமைகளை இழந்து சொல்ல முடியாத துயர நினைவுகளையும் சுமந்து நிற்கும் தமிழர்கள், அந்த நினைவுகளிலிருந்து விடுபடவே முடி யாது. இத்துயரம் தோய்ந்த நினைவுகளோடு, தமிழர்கள் சிங்களர்களோடு ஒன்றுபட்ட இலங்கையில் சமமாக வாழவே முடியாது. இதுவே இன அரசியல் ரீதியான உண்மை.
11) பல்குழல் பீரங்கி, ஏவுகணைகள் போன்ற அழிவு ஆயுதங்களால் நாள்தோறும் அப்பாவித் தமிழர்கள் -அவர்கள் இடம் பெயர்ந்த முகாம் களிலேயே, நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 2000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். 5000க்கும் அதிகமானோர் படுகாயமடைந் துள்ளனர். 21-ம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையை தமிழ் ஈழம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
12) இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, போர் நிறுத்தத்துக்கு உண்மையான நோக்கத்தோடு தயாராகவே உள்ளது. மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்பு கிறது இந்த போர் நிறுத்தம் - சமரசப் பேச்சு வார்த்தையை நோக்கி முன்னேறவே விரும்புகிறோம்.
13) விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை - பிரச் சினையின் தீர்வுக்கு உதவாது என்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதம் தான் தமிழர்களின் பாதுகாப்பு கவசம். அதுவே தமிழர்கள் அரசியல் விடுதலைக்கான கருவி என்பதே அரசியல் எதார்த்தம். தமிழ் மக்களின் பாதுகாப்பு - விடுதலைப்புலிகளின் ஆயுதங் களைச் சார்ந்தே உள்ளது. சர்வதேச கமூகத்தின் ஆதரவுடன் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று உருவாகும்போது, விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கான அவசியமே நேராது. தமிழ் மக்கள் கொடூரமான இனப் படு கொலைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் தீர்வு எதுவும் இல்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடுவது சாத்திய மில்லாதது. அதே நேரத்தில் அரசு நடத்தி வரும் இனப் படுகொலை யுத்தத்தை பாராட்டும் செயலாகவும் அது அமைந்து விடும்.
14) எனவே சர்வதேச சமூகம் இனப்படுகொலையை தடுத்திட போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டுகிறோம். இதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் உருவாக்கி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்யாவசியப் பொருட்களை கிடைத்திடச் செய்ய வேண்டுகிறோம்.
உடனடி போர் நிறுத்தம் கொண்டு வரும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, இணைந்து பணியாற்றிடவும், அந்த போர் நிறுத்தம் அரசியல் தீர்வை நோக்கி முன்னேறவும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் - என்று விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத் துள்ளது.
இந்தியாவின் காதுகளில் இந்த நியாயங்களின் குரல் கேட்கமா? ட
‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?
ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட் டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிர° கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்த வில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்!
இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர் களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டிய லிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாடி முன்னுரையோடு வெளி யிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:
தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?
மொராக்கோ நாட்டில் நடை பெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக் கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது.
அதேபோல பால°தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீ காரம் அளித்திருக்கிறது. பால°தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இ°ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப் பட்டது.
உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேச மாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.
நான் கேட்பதெல்லாம், மொராக் கோவில் போராடுகின்ற கொரில்லாக் களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பால°தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர் களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்?
தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ் நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன். வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிர° நண்பர்கள் சொல்வார்களே யானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தி யிலே உள்ள உள்துறை அமைச்சகத் திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிர° எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடை பெறுகின்ற அரசு) பிரிவினை வாதத் திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆக°டு 14 ஆம் நாள் பாகி°தான் சுதந்திரம் அடைந்த நாள்!
ஆக°டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகி°தான் கொடி ஏற்றப்பட்டது. பாகி°தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”
காங்கிர° எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிர° தலைமையும்தான்.
இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது?
காஷ்மீரில் பாகி°தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண் டிருக்கிறது. எனவேதான் இவர் களுடைய தேசியம், வேறு யார் எதிர்த் தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது.
இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக் கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன் னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத் திற்கு விரோதம் என்று காங்கிர° நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடு படுவது ராஜ துரோகம் என்று சொன் னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என் பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறை யில் அடைப்பது ஏன்? (கலைஞர் போர் முழக்கம் தொடரும்)
‘தமிழீழம் கிடைச்சுட்டா, நம்மளவா கதி என்னாகுமோ’
தமிழ்நாட்டு மக்கள் மீது சோனியா எல்லை மீறிய கோபம் கொண்டிருப்பதாக ஏடுகள் எழுதுகின்றன. விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க ‘வெஞ்சினம்’ பூண்டு செயல்படும் சோனியாவுக்கு தமிழ்நாட்டில் எழும் உணர்வுகளை சகிக்க முடியவில்லை போலிருக்கிறது. ‘ஜூனியர் விகடன்’ ஏடு இதை வெளிப்படுத்தியிருப்பதோடு தம்மை சந்திக்க வந்த மருத்துவர் இராமதாசிடமும் இதை சோனியா வெளிப்படுத்தியிருப்பதாக எழுதி யுள்ளது. அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிக மோசமாக பார்ப்பன வெறியுடன் செயல்பட்ட போது மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இடஒதுக்கீட்டில் உறுதியாக நின்றார். அதுபோல பொதுவிடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் கொண்டு வருவதிலும் உறுதியாக செயல்பட்டார். மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே, மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தியவை என்று மருத்துவரிடம் கூறிய சோனியா, அப்போதெல்லாம் அன்புமணி பக்கம், மத்திய அரசு நின்றது என்று கூறி, அதேபோல் இலங்கைப் பிரச்சினையில் எங்களை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்று, எச்சரித்ததாக அந்த ஏடு கூறுகிறது.
மத்திய பார்ப்பன அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் திமிர் பிடித்த அறிக்கையைக் கண்டித்து, பா.ம.க., ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது - சோனியா, அவர்களைக் கடுமையாக முறைத்துப் பார்த்திருக்கிறார்.
“சோனியாவின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது. எங்களை முறைத்துப் பார்த்தபோது அவருடைய சுயமுகம் நன்றாகத் தெரிந்தது” என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக அந்த ஏடு எழுதியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் போலீசார் தடியடிக்குப் பிறகு - தமிழக முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசிய சோனியா, தொடக்கத்திலேயே மாநில அரசு வழக்கறிஞருக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும் என்று கண்டிப்பாகவே தொலைபேசியில் கூறியதாக - ‘ஜுனியர் விகடன்’ குறிப்பிட்டுள்ளது. மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் ‘சூசகமாக’ வெளியிட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற முறையில் ரகசியமாக ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய தோடு, தேவைப்பட்டால், வெளிப்படையாகவும் களம் இறங்கத் தயார் என்று சோனியா சிங்களத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாராம். சோனியாவே - வெளிநாட்டுத் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு - ஈழத் தமிழர்களுக்கு உதவிட வேண்டாம் என்று பேசி வருவதால்தான், உலகம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த செய்தி கூறுகிறது.
தன்மானமுள்ள தமிழருவி மணியன்
காங்கிரசின் துரோகத்தை எதிர்த்து சீர்காழியில் இரவிச்சந்திரன் என்ற காங்கிரசுத் தமிழன் தீக்குளித்தான். உணர்வுள்ள காமராசர் வழி வந்த காங்கிரசுத் தமிழர்களால் இந்த பார்ப்பனிய துரோகங்களை சகிக்க முடியவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறவர், தமிழருவி மணியன். காங்கிர° கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளரான அவர் மதுரையில் செய்தியாளர் களிடம் தனது தமிழின உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டார்.
வெடிகுண்டு களால் நாள்தோறும் கொத்துக்கொத்தாய் தமிழினம் அழிந்துக் கொண்டிருக்கும் சூழலில், சோனியாகாந்தி ஈழத் தமிழரின் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. இவருடைய தலைமையில் இயங்கும் காகித நியமன காங்கிரசில், என் மொழி, இன அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவே நான் இன்று முதல், அகில இந்திய காங்கிர° குழு உறுப்பினர், மாநிலப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விடுபடுகிறேன்” - என்று அறிவித்துள்ளார்.
சோ - சு.சாமி
சு. சாமிக்கு முட்டை அடி கிடைத்தவுடன், அவரது இல்லம் நோக்கி, ஓடோடி ஆறுதல் கூறச் சென்றவர் துக்ளக் சோ பார்ப்பனர். ‘நேரா முகத்தை நோக்கி முட்டையை வீசுகிறான் பாருங்கோ; பெரியார் காலத்துல கூட பேசிண்டுதான் இருந்தா; இப்போதுதான், இப்படி எல்லாம் நடக்குது; இப்பவே இந்த நிலையின்னா, ‘தமிழ் ஈழம்’ கிடைச் சுட்டதுன்னா நம்மளவா கதி என்னவாகுமோ” என்று சோவும், சுப்ரமணிய சாமியும் தங்கள் உணர்வு களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘நக்கீரன்’ ஏடு - இந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளது. . by my mail
Kuttipoison
Saturday, February 28, 2009
Friday, December 12, 2008
இந்திய டுடே கவனத்திற்கு
மண்டல் நாயகன் வி.பி.சிங் பற்றி தவறாக எழுதிய
இந்திய டுடே எஸ்.பி (சுனா புனா)க்கு
இடஒதுக்கீட்டால் உரிமைகளைப் பெற்ற எம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து 10/12/08 அன்று தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும்,இன்று(12/12/08) நடைபெறும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்ளும், சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும் நேரில் காண்பதற்கு திராணி இல்லையென்றாலும் மற்ற ஊடகங்களைப் பார்த்தாவது
எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்! இல்லையெனில்
எம் உணர்ச்சிகளை உமக்கு உணர்த்துவோம்.
இந்திய டுடே எஸ்.பி (சுனா புனா)க்கு
இடஒதுக்கீட்டால் உரிமைகளைப் பெற்ற எம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து 10/12/08 அன்று தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும்,இன்று(12/12/08) நடைபெறும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்ளும், சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும் நேரில் காண்பதற்கு திராணி இல்லையென்றாலும் மற்ற ஊடகங்களைப் பார்த்தாவது
எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்! இல்லையெனில்
எம் உணர்ச்சிகளை உமக்கு உணர்த்துவோம்.
Tuesday, December 9, 2008
திமிர் பிடித்த இந்திய டுடே
திமிர் பிடித்த இந்திய டுடே இதழில் இட ஒதுக்கீட்டு தலைவன் வீ.பி.சிங் பற்றிய தவறான தகவலை வெளியிட்ட எஸ்.பி (சுனா புனா) வை வன்மையாக கண்டிக்கிறோம்...
தமிழ் மாணவன்
தமிழ் மாணவன்
Friday, December 5, 2008
இந்திய ஜனநாயகம் எங்கே ?
நண்பர்களே,,,,, கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனது ரத்தமே உறைந்துவிடும்போல இருந்தது. காரணம், AK47 வகையான பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டிருந்த இவர்களை எதிர்க்கப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் கையிலிருந்ததோ பழங்காலத்து வெள்ளையர்காலத்தில் அளிக்கப்பட்ட துப்பாக்கி. இதைக்கொண்டு எந்த நம்பிக்கையிலும், தைரியத்திலும் இந்தப்படையினர் தீவிரவாதிகளை எதிர்கொள்கிறார்கள் என்று என்னைப்போலவே ஆயிரக்கணக்கானவர்கள் வியப்படைந்திருப்பார்கள். விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இக்காலத்தில், அரசின் பாதுகாப்புத்துறையும், தங்களை முன்னோடியாக்கிக்கொள்ள வேண்டும். காரணம், அரசின் மீது நம்பிக்கை கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். எல்லா விஷயத்திலும், லஞ்சம், ஊழல், அராஜகம், இடஒதுக்கீடு, சிக்கனம் என்று ஆகிவிட்டால், நாடு மற்றும் மக்களது பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதை மும்பைச்சம்பவம் அப்பட்டமாக காட்டிவிட்டது. ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபின்னும் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும், உதவித்தொகை அறிவிப்பதையும் விட, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத்தடுப்பதே சாலச்சிறந்தது. புதிய உளவு அமைப்பை ஏற்படுத்துவதை வரவேற்றாலும், அது வழக்கமான சம்பிரதாயமாக இல்லாமல், உண்மையான ஆபத்தை மனத்தில் கொண்டு செயல்பட அரசு வழிவகை செய்யவேண்டும். முக்கியமாக, இந்த அமைப்புகளுக்கு போதிய முடிவெடுக்கும் அதிகாரம், நிதி, பயிற்சி எல்லாம் வழங்கப்படவேண்டும். மும்பைச்சம்பவத்தால், 4000 கோடி இழப்பு என்பதை அறிகிறோம். இந்தளவு இழப்பதற்கு பதிலாக, சுமார் நூறு கோடியை செலவிட்டு, நாட்டின் பாதுகாப்புக்காக தரமான ஆயுதங்கள், ஹெலிகாப்டர், வாகனங்கள், தகவல் தொடர்புச்சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்குச்செலவழிப்பதில் தவறில்லை. எல்லாவற்றிற்கும், ஒருமித்த கருத்து என்று அரசு தப்பிப்பதற்கு பதில், துணிச்சலான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். இது நடக்காதவரையில், நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதிகளின் தயவில் இருக்கவேண்டியதே.
நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறை கிடையாது . நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.
ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்? யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது போன்று தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை. ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார். எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான். இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை. இன்னொரு கொடுமையும் உண்டு. பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான். இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு. இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள். இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம். இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.
இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான். இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை. நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்? ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்... ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள். நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.
நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம். நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு. தனிமனித ஓழுக்கம் இல்லை, எப்படி ஜன நாயாகம் ஜெயிக்கும்.எதிலும் லஞ்சம், எங்கும் லஞ்சம், எதற்க்கெடுத்தாலும் லஞ்சம்,Birth certificate வாங்குவதற்கு லஞ்சம்,Death Certificate வாங்குவதற்கு லஞ்சம்,Bank loan வாங்குவதற்கு லஞ்சம்,passport verification வாங்குவதற்கு லஞ்சம்,Gas connection வாங்குவதற்கு லஞ்சம்,EB connection வாங்குவதற்கு லஞ்சம்,Two wheeler license வாங்குவதற்கு லஞ்சம்,house registration வாங்குவதற்கு லஞ்சம்,school admission வாங்குவதற்கு லஞ்சம்,Hospital admission வாங்குவதற்கு லஞ்சம்,Insurance money வாங்குவதற்கு லஞ்சம்,போங்கய்யா வாழ்க்கை வெறுத்து போச்சு.....இப்படி இந்தியா இன்றைக்கு இருக்கும்போது. எப்படி மனசாட்சி இல்லாமல் ஜன நாயகம் வென்றது, ஜன நாயகம் வாழ்க, ஜன நாயகம் இனிக்கிறது என்று சொல்லமுடிகிறது.கேவளம்.... மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு. வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.
முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி. தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ?இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை. இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும். இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும். இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும். இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும். மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது. ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும். ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்..
இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.உளவுத்துறையின் இந்த நிலைக்கு காரணம் யார்? இத்துப்போன பழைய துப்பாக்கியை கொடுத்து போராட்டத்துக்கு அனுப்பினால் யாராவது போருக்கு செல்லத் துணிவார்களா? இல்லை அப்படியே நவீன ஆயுதங்கள் கொடுத்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயல் பட முடியுமா? நாட்டுக்காக உயிர் நீத்த ஒருவருக்கு இரங்கல் செய்தி வெளியிடக் கூட ஒரு முதலமைச்சருக்கு நேரம் இல்லை. எதிர் கட்சிகளில் கூக்குரலுக்கு பிறகு நேரில் வந்து ஆறுதல் கூறும் ஒரு ஸ்டண்ட். கர்நாடகாவில் சர்ச்சுகளின் மீது யார் தாக்குதல் நடத்தினார் என்று கண்டறிய உளவுத்துறை வேண்டும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதென்றால் எதிர்கட்சியினரை கண்காணிக்க உளவுத்துறையினர் வேண்டும், இல்லை ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கூட்டங்களை ஒட்டு கேட்பதற்கு உளவுத்துறையினர் வேண்டும். அப்போது தான் தேவைப் படும் நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்தலாம். இப்படி இவர்கள் குப்பை அரசியல் வாதிகளால் செருப்பு போல நடத்தப் படும் பொது எப்படி இவர்கள் மக்களுக்காக செயல் படமுடியும்?அப்படியே ஒருவேளை இவர்கள் வீரமாக செயல் பட்டால் இவர்களை எதிர்த்து குரல் கொடுக்க எதிர் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள் இருக்கின்றதே. பல ஆண்டுகளாக பல அரசாங்கத்தினால் பிடிக்க முடியாத வீரப்பனை திரு விஜய குமார் சுட்டு பிடித்தார் (அல்லது பிடித்து சுட்டார்). இப்போது அவர்எங்கே இருக்கிறார் ? எப்படி நடத்தப் படுகிறார்? இப்படி போராடி பிடித்த பல திருடர்கள் மற்றும் தீவிரவாதிகள் அரசியல் காரணத்தாலோ, பிணைக் கைதி மிரட்டல் களாலோ விடுவிக்கப் பட்ட பல நிகழ்வுகள் இங்கு உண்டு.முதலில் இவர்கள் அரசியவாதிகளால் நடத்தப் படுவது கூடாது. அதன் பிறகு இவர்களில் சேவையை நல்ல முறையில் மதிக்கப் படவேண்டும். இன்று ராஜ் தாக்கரே ,பால் தாக்கரே மற்றும் காடுவெட்டி குருவை தெரிந்த அளவுக்கு கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் பெயர் கூட தெரியாது. ஒருவருடைய தியாகங்கள் மதிக்கப் படும் வரை, பாதுகாப்பு துறைகள் (காவல், உளவு மற்றும் இராணுவம்) சுதந்திரமாக செயல் படும் வரையில் இதே நிலைதான் தொடரும்.
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்.
(எமக்கு வந்த மின்னஞ்சலிலிருந்து...)
நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறை கிடையாது . நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.
ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்? யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது போன்று தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை. ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார். எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான். இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை. இன்னொரு கொடுமையும் உண்டு. பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான். இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு. இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள். இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம். இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.
இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான். இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை. நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்? ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்... ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள். நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.
நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம். நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு. தனிமனித ஓழுக்கம் இல்லை, எப்படி ஜன நாயாகம் ஜெயிக்கும்.எதிலும் லஞ்சம், எங்கும் லஞ்சம், எதற்க்கெடுத்தாலும் லஞ்சம்,Birth certificate வாங்குவதற்கு லஞ்சம்,Death Certificate வாங்குவதற்கு லஞ்சம்,Bank loan வாங்குவதற்கு லஞ்சம்,passport verification வாங்குவதற்கு லஞ்சம்,Gas connection வாங்குவதற்கு லஞ்சம்,EB connection வாங்குவதற்கு லஞ்சம்,Two wheeler license வாங்குவதற்கு லஞ்சம்,house registration வாங்குவதற்கு லஞ்சம்,school admission வாங்குவதற்கு லஞ்சம்,Hospital admission வாங்குவதற்கு லஞ்சம்,Insurance money வாங்குவதற்கு லஞ்சம்,போங்கய்யா வாழ்க்கை வெறுத்து போச்சு.....இப்படி இந்தியா இன்றைக்கு இருக்கும்போது. எப்படி மனசாட்சி இல்லாமல் ஜன நாயகம் வென்றது, ஜன நாயகம் வாழ்க, ஜன நாயகம் இனிக்கிறது என்று சொல்லமுடிகிறது.கேவளம்.... மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு. வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.
முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி. தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ?இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை. இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும். இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும். இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும். இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும். மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது. ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும். ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்..
இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.உளவுத்துறையின் இந்த நிலைக்கு காரணம் யார்? இத்துப்போன பழைய துப்பாக்கியை கொடுத்து போராட்டத்துக்கு அனுப்பினால் யாராவது போருக்கு செல்லத் துணிவார்களா? இல்லை அப்படியே நவீன ஆயுதங்கள் கொடுத்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயல் பட முடியுமா? நாட்டுக்காக உயிர் நீத்த ஒருவருக்கு இரங்கல் செய்தி வெளியிடக் கூட ஒரு முதலமைச்சருக்கு நேரம் இல்லை. எதிர் கட்சிகளில் கூக்குரலுக்கு பிறகு நேரில் வந்து ஆறுதல் கூறும் ஒரு ஸ்டண்ட். கர்நாடகாவில் சர்ச்சுகளின் மீது யார் தாக்குதல் நடத்தினார் என்று கண்டறிய உளவுத்துறை வேண்டும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதென்றால் எதிர்கட்சியினரை கண்காணிக்க உளவுத்துறையினர் வேண்டும், இல்லை ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கூட்டங்களை ஒட்டு கேட்பதற்கு உளவுத்துறையினர் வேண்டும். அப்போது தான் தேவைப் படும் நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்தலாம். இப்படி இவர்கள் குப்பை அரசியல் வாதிகளால் செருப்பு போல நடத்தப் படும் பொது எப்படி இவர்கள் மக்களுக்காக செயல் படமுடியும்?அப்படியே ஒருவேளை இவர்கள் வீரமாக செயல் பட்டால் இவர்களை எதிர்த்து குரல் கொடுக்க எதிர் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள் இருக்கின்றதே. பல ஆண்டுகளாக பல அரசாங்கத்தினால் பிடிக்க முடியாத வீரப்பனை திரு விஜய குமார் சுட்டு பிடித்தார் (அல்லது பிடித்து சுட்டார்). இப்போது அவர்எங்கே இருக்கிறார் ? எப்படி நடத்தப் படுகிறார்? இப்படி போராடி பிடித்த பல திருடர்கள் மற்றும் தீவிரவாதிகள் அரசியல் காரணத்தாலோ, பிணைக் கைதி மிரட்டல் களாலோ விடுவிக்கப் பட்ட பல நிகழ்வுகள் இங்கு உண்டு.முதலில் இவர்கள் அரசியவாதிகளால் நடத்தப் படுவது கூடாது. அதன் பிறகு இவர்களில் சேவையை நல்ல முறையில் மதிக்கப் படவேண்டும். இன்று ராஜ் தாக்கரே ,பால் தாக்கரே மற்றும் காடுவெட்டி குருவை தெரிந்த அளவுக்கு கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் பெயர் கூட தெரியாது. ஒருவருடைய தியாகங்கள் மதிக்கப் படும் வரை, பாதுகாப்பு துறைகள் (காவல், உளவு மற்றும் இராணுவம்) சுதந்திரமாக செயல் படும் வரையில் இதே நிலைதான் தொடரும்.
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்.
(எமக்கு வந்த மின்னஞ்சலிலிருந்து...)
Saturday, November 29, 2008
v.p.singh
வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங்
நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.
இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்கள். அதற்காகவே உழைத் தார்கள். ஒரு மனிதனுக்கு சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம் என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதி யால், அவமானத்தால் பாதிக்கப்பட் டார்கள். நெருப்பிலே வெந்து கொடு மைப்படுவதைவிட கொடுமையானது தான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. எனவேதான் அந்தக் கொடு மையை துடைத்து எறிவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள்.
சாதி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய கோடிக்கணக் கான மக்களின் உள்ளங்களை - மனத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கைகளிலே போடப்பட்ட இரும்புக் கை விலங்கு களை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப் பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத் தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான் நமக்கு சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.
இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப் பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த சாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாகவே அடித்தார்கள்.
நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற் றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்த வர்கள் இங்கே உருவாக்கி வைத்த அடி மைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சி னைக்குத் தீர்வே இல்லை.
மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக் களுக்கான ரேசன் கார்டு கிடைப் பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென் றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடு கின்ற கட்சிகளில், எங்களுடைய ஜனதாதளம்தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட - சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேபோல நாட்டின் அனைத்து அதிகார மட்டத் திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
வீரமணி அவர்களே, உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்த சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு, அந்த அடித்தளத்தைத் தொட்டு, பணி யாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியை விட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங் களைப் பாராட்டுகிறோம்.
அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.
(23.12.1992 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள், பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையிலிருந்து "விடுதலை" 30.12.1992)
நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.
இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்கள். அதற்காகவே உழைத் தார்கள். ஒரு மனிதனுக்கு சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம் என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதி யால், அவமானத்தால் பாதிக்கப்பட் டார்கள். நெருப்பிலே வெந்து கொடு மைப்படுவதைவிட கொடுமையானது தான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. எனவேதான் அந்தக் கொடு மையை துடைத்து எறிவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள்.
சாதி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய கோடிக்கணக் கான மக்களின் உள்ளங்களை - மனத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கைகளிலே போடப்பட்ட இரும்புக் கை விலங்கு களை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப் பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத் தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான் நமக்கு சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.
இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப் பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த சாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாகவே அடித்தார்கள்.
நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற் றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்த வர்கள் இங்கே உருவாக்கி வைத்த அடி மைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சி னைக்குத் தீர்வே இல்லை.
மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக் களுக்கான ரேசன் கார்டு கிடைப் பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென் றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடு கின்ற கட்சிகளில், எங்களுடைய ஜனதாதளம்தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட - சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேபோல நாட்டின் அனைத்து அதிகார மட்டத் திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
வீரமணி அவர்களே, உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்த சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு, அந்த அடித்தளத்தைத் தொட்டு, பணி யாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியை விட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங் களைப் பாராட்டுகிறோம்.
அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.
(23.12.1992 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள், பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையிலிருந்து "விடுதலை" 30.12.1992)
mumbai
மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது. தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் இந்தியாவுக்கு சரியான பாடம் என தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளது. சிறிலங்கா பாகிஸ்தானின் தீவிர விசுவாசி. அது எப்போதும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட வரலாறு கிடையாது. பங்களாதேசத்தின் மீதான போரின் போதும் அது பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது.
எனவே, மும்பாய் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகையில் பாகிஸ்தானின் தீவிர விசுவாசிகளான சிங்கள மக்களின் பத்திரிகை ஒன்று மகிழ்ச்சி தெரிவிப்பது வியப்புக்குரியது அல்ல என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது. தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் இந்தியாவுக்கு சரியான பாடம் என தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளது. சிறிலங்கா பாகிஸ்தானின் தீவிர விசுவாசி. அது எப்போதும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட வரலாறு கிடையாது. பங்களாதேசத்தின் மீதான போரின் போதும் அது பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது.
எனவே, மும்பாய் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகையில் பாகிஸ்தானின் தீவிர விசுவாசிகளான சிங்கள மக்களின் பத்திரிகை ஒன்று மகிழ்ச்சி தெரிவிப்பது வியப்புக்குரியது அல்ல என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)